Current Affairs – 30 January 2018
இந்தியா
1.மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா டெல்லியில் நேற்று தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.
2.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இன்று காலை 11 முதல் 11.02 மணி வரை 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
3.இந்தியாவின் 69-வது குடியரசு தினம், ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது. அன்றைய தினம் மட்டும் 11 லட்சம் பேர் குடியரசு தினம் குறித்து ட்விட் செய்துள்ளனர்.
உலகம்
1.துருக்கியின் மார்டின் நகரை சேர்ந்த விவசாயி சுல்தான் கோசன் (36). இவர் 8 அடி 9 அங்குலம் உயரமானவர். இதற்காக அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி (25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம்.உலகின் குள்ளமான பெண் என்ற வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இவர்கள் இருவரும் எகிப்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்.
இன்றைய தினம்
1.1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
–தென்னகம்.காம் செய்தி குழு